கனமழையால் வெள்ளத்தால் சூழ்ந்த தட்சிண கன்னடா மற்றும் உத்தர கன்னடா

0 1164
கனமழையால் வெள்ளத்தால் சூழ்ந்த தட்சிண கன்னடா மற்றும் உத்தர கன்னடா

கர்நாடக மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், தட்சிண கன்னடா மற்றும் உத்தர கன்னடா பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

தட்சிண கன்னடா மாவட்டத்தின் கடபா மற்றும் சுப்பிரமணியா பகுதிகளுக்கு உட்பட்ட 4 கிராமங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், இடுப்பளவுக்கு வெள்ள நீர் தேங்கியது.

வரும் ஆகஸ்டு 6-ம் தேதி வரை கர்நாடகாவில் கனமழை தொடரும் என தெரிவித்த வானிலை ஆய்வு மையம், பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments