வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்து பெண்ணை போராடி மீட்ட போலீசார்

0 1391

அமெரிக்காவின் ஹரிசோனா மாகாணத்தில் வெள்ளநீரில் சிக்கிய காரில் இருந்து ஒரு பெண்ணை போலீசார் கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்குள்ள சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளம் சூழ்ந்த சாலையில் தனது வளர்ப்பு நாயுடன் சென்ற அந்த பெண்ணின் கார் வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டது.

சாலையின் நுனியில் தொற்றிக்கொண்டிருந்த அந்த காரின் ஜன்னல் வழியே கயிறு கட்டி அந்த பெண்ணை போலீசார் மீட்டனர். ஆனால், அவரது நாயை காப்பாற்ற முடியவில்லை என்று போலீசார் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments