ரூ.88,078 கோடி கொடுத்து 5ஜி ஏலத்தை கைப்பற்றியது ஜியோ நிறுவனம்..!

0 2867
ரூ.88,078 கோடி கொடுத்து 5ஜி ஏலத்தை கைப்பற்றியது ஜியோ நிறுவனம்..!

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 88 ஆயிரம் கோடி ரூபாயுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது.

நேற்றுடன் நிறைவு பெற்ற ஏலத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளது.

இது கடந்தாண்டு 4ஜி அலைக்கற்றை விற்பனையான தொகையைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும்.

10 அலைவரிசைகளில் வழங்கப்பட்ட 72,098 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளில் 71 சதவீதம் விற்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments