ஆர்.எஸ்.எஸ் தலைவருடன் மகாராஷ்டிரா முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு.!

0 1135

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்தனர்.

மும்பையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் அவர்கள் ஒன்றாக சந்தித்தனர். பின்னர் பேசிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பதவியேற்ற பிறகு முதல்முறையாக ஆர்.எஸ்.எஸ் தலைவரை சந்தித்ததாக தெரிவித்தார்.

தங்கள் அரசு இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகவும், அதற்காக மோகன் பகவத்தின் ஆசிர்வாதத்தை பெற்றதாகவும் தெரிவித்தார். பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments