லைக்குகள் பெறுவதற்காக காட்டுப்பன்றிகள் இருந்த கூண்டுக்குள் குதித்த 3 இளைஞர்கள்..

0 2073

மூக வலைத்தளங்களில் லைக்குகள் பெறுவதற்காக காட்டுப்பன்றிகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் உயிரை பணையம் வைத்து குதித்து வீடியோ வெளியிட்ட 3 இளைஞர்களை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாகப்பட்டினம் இந்திரா காந்தி மிருகக்காட்சிசாலையில் காட்டுப்பன்றிகள் இருந்த கூண்டுக்குள் குதித்த 3 இளைஞர்களை விரட்டி வந்த காட்டுப்பன்றி அவர்களுள் ஒருவரை முட்டி கீழே தள்ளியது.

இந்த காணொளி இணையத்தில் வைரல் ஆனது. மிருகக்காட்சி சாலை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments