பெண்ணிடம் 11 சவரன் தங்க சங்கிலி பறிக்க முயற்சி.. தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

0 2474

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

காட்டாதுறையைச் சேர்ந்த சகோதரிகளான சுபா மற்றும் சுஜி ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அழகிய மண்டபம் அருகே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரில் ஒருவன் சுஜியின் கழுத்தில் இருந்த 11 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளான்.

இதைக் கண்ட சகோதரிகள் அந்த வாகனத்தை எட்டி உதைத்த போது கீழே விழுந்ததில் 2பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவனை மட்டும் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments