வீடு வாடகைக்கு பார்ப்பது போல் வந்து மூதாட்டியை கட்டிப் போட்டு நகைகள் கொள்ளை

0 3755
வீடு வாடகைக்கு பார்ப்பது போல் வந்து மூதாட்டியை கட்டிப் போட்டு நகைகள் கொள்ளை

தஞ்சாவூரில் வீடு வாடகைக்கு பார்ப்பதுபோல் நடித்து 85 வயது மூதாட்டியை கட்டிப் போட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அருளானந்த நகரில் ஆக்னஸ் மேரி என மூதாட்டி தனியாக வசித்து வரும் நிலையில், நேற்று மாலையில் அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.

எதிர்வீட்டில் குடியிருந்தவர்கள் மூதாட்டியின் வீட்டில் பார்த்தபோது, கை, கால்கள் கட்டப்பட்டு அவர் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து விசாரித்த போலீசாரிடம், 2 பேர் வீடு வாடகைக்கு பார்ப்பது போல் வந்து தன்னை கட்டி போட்டு, வளையல், மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்ததாக மூதாட்டி கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments