பாலாற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலி

0 3031
பாலாற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலி

செங்கல்பட்டு அருகே பாலாற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், சதீஷ் என்ற தனது நண்பரின் குடும்பத்தினருடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். செல்லும் வழியில் மாமண்டூர் பாலாற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சதீஷின் மகள்களான வேதஸ்ரீயும் சிவசங்கரியும் ஆழமான பகுதிக்கு சென்று நீச்சல் தெரியாமல் திடீரென நீரில் மூழ்கிய நிலையில், அவர்களை காப்பாற்றச் சென்ற சீனிவாசனும் நீரில் முழ்கியுள்ளார்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி, 2 சிறுமிகளையும் சடலமாக மீட்டனர். நீரில் மூழ்கிய சீனிவாசனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments