குடும்பத்தகராறில் தந்தை பட்டாசு தயாரிக்க வீட்டில் வைத்திருந்த மூலப்பொருட்களுக்கு தீ வைத்த மகன்

0 3356
குடும்பத்தகராறில் தந்தை பட்டாசு தயாரிக்க வீட்டில் வைத்திருந்த மூலப்பொருட்களுக்கு தீ வைத்த மகன்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே குடும்பத்தகராறில், பட்டாசு தயாரிக்க தந்தை வீட்டில் வைத்திருந்த மூலப்பொருட்களுக்கு மகன் தீ வைத்ததால் அவை வெடித்து சிதறி வீட்டின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.

தரணி என்பவர் அவரது அண்ணனின் பட்டாசு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். பெரியப்பாவிடம் தனது தந்தை உதவியாளர் போல் வேலை பார்ப்பது மகன் நிர்மலுக்கு பிடிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

அது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது, பட்டாசு தயாரிக்க வீட்டில் பெரியப்பா வைத்திருந்த மூலப்பொருட்களுக்கு நிர்மல் தீ வைத்ததாகத்தெரிகிறது. பலத்த சத்தத்துடன் அவை வெடித்ததால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தந்தை, மகன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments