சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

0 1903
சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் சென்ற கார் தீப்பிடித்த எரிந்த நிலையில், அதில் பயணித்தவர்கள் உடனடியாக வெளியேறி உயிர்த்தப்பினர்.

இன்று மதியம் திம்பம் மலைப்பாதையின் 19வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற ஒரு காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதைக்கண்ட காரில் இருந்தவர்கள் உடனடியாக அதனை விட்டு வெளியேறினர். பின்னர், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பரவிய தீயை அணைத்தனர்.

கார் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments