பிரிட்டனில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

0 2819

பிரிட்டனில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் சேவை முற்றிலுமாக ஸ்தம்பித்தது.

ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த புதன்கிழமையன்று 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நேற்று நாடு முழுவதும் ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தினர் 24 மணிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் ஆகஸ்ட் 13ம் தேதி மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ரயில்வே ஊழியர்கள் அறிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments