ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.!
ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் இருந்து இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை நடத்தினர்.
அந்த காரில் பயணம் செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இப்ரான் அன்சாரி, ராஜேஷ் கச்சாப், நமன் பிக்சல் ஆகிய மூவரும் ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக எடுத்துச் சென்ற பணம் சிக்கின.
Comments