கள்ளக்குறிச்சி கணியாமூர் தனியார் பள்ளி கலவரம்.. மேலும் மூவர் கைது.!
கள்ளக்குறிச்சி கணியாமூர் தனியார் பள்ளியில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக மேலும் மூவரை சிறப்புப் புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர்.
வாட்ஸ் அப் குழு அமைத்து வன்முறை குறித்த கருத்தை பதிவிட்டதாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த துரைபாண்டியும், கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டதோடு, கலவரத்தில் ஈடுபட்டதாக அய்யனார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments