சட்டவிரோத மின்வேலியில் சிக்கி, தந்தை, 2 மகன்கள் பலி

0 3856

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி தந்தை மகன்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம், முகவர் கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான அய்யங்காளை தனது 25 வயது மகன் அஜித் மற்றும் 23 வயது மகன் சுகந்திரபாண்டி ஆகியோருடன் சிவகங்கை மாவட்ட எல்லை அருகே சட்டவிரோத முயல்வேட்டைக்கு சென்றதாகத் தெரிகிறது.

அப்போது காட்டுப் பன்றிகளிடமிருந்து விவசாய நிலத்தை பாதுகாப்பதற்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட மின்வேலியை மிதித்ததில் மூவரும் உயிரிழந்தனர். இதில் அஜித், இராணுவத்தில் பணியாற்றி விட்டு நேற்றுதான் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்த நிலையில், பலியான பரிதாபம் அரங்கேறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments