ஆடி திருவிழாவின் போது அம்மனுக்கு கரகம் எடுப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல்.!
சிவகங்கை மாவட்டம் அருகே அம்மனுக்கு கரகம் எடுப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
அருணகிரிபட்டினம் முத்துமாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவின் போது முக்கிய நிகழ்வான கரகம் எடுப்பு விழா இரு சமூக மக்களிடையே சீட்டு குலுக்கி போட்டு யார் பெயர் வருகிறதோ அந்த சமூக மக்கள் கரகம் எடுப்பது வழக்கமாகும்.
இந்நிலையில் ஒரு தரப்பினர் நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெற்று வந்துள்ளனர், இந்நிலையில் மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தின் நாடி மாற்று உத்தரவு நேற்று பெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மறொரு தரப்பு கரகத்தை எடுக்க முயன்ற போது அங்கு மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு இருதரப்பினரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
Comments