மாணவர்கள் கண்முன் ஆசிரியைகள் குடுமிப்பிடி சண்டை.. மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை!

0 40875

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில்  2 ஆசிரியைகள் போட்ட சண்டை குறித்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

முத்துநாய்க்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கீதாராணி மற்றும் பிரியா ஆகியோர் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றனர்.  இந்த நிலையில் நேற்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருக்கும்போது சொந்த பிரச்சினை காரணமாக ஆசிரியைகளும் குடுமிபிடி சண்டை போட்டுக்கொண்டனர்.

அப்போது மற்ற ஆசிரியைகள் சமாதானப்படுத்திய நிலையில் பிரியா மீண்டும் கீதாராணியை தாக்கியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments