தேசிய போதைப் பொருள் தடுப்பு மாநாடு: அமித்ஷா முன்னிலையில் 30000 கிலோ போதைப் பொருட்கள் தீயிட்டு அழிக்க ஏற்பாடு!

0 3243

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான தேசிய மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித் ஷா சண்டிகர் பங்கேற்க உள்ளார்.

அதிகாரிகள் அமித் ஷா முன்னிலையில் இன்று 30 ஆயிரம் கிலோ எடை கொண்ட போதைப் பொருட்களை நாட்டின் நான்கு பகுதிகளில் ஒரே நேரத்தில் தீயிட்டு அழிக்க உள்ளனர்.

இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு குறைந்தது 75 ஆயிரம் கிலோ போதைப் பொருட்களை ஒழிப்பது என்று அதிகாரிகள் சபதம் எடுத்தனர்.

இந்நிலையில் திட்டமிட்ட இலக்கை விட அதிகமான அளவுக்கு போதைப் பொருள்களை அழித்து  போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக யுத்தத்தில் மகத்தான வெற்றியை அடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments