கோதாவரி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சேத்ரா கோவில்

0 4382

ஆந்திர மாநிலத்தில் கோதாவரி நதியில் கரையோரம் இருந்த கோவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகி உள்ளது. 

மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக கோதாவரி நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு புறமும் கரையை மூழ்கடித்தபடி தண்ணீர்பாய்ந்தோடுகிறது.

இந்த நிலையில்  கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள புருஷோத்தப்பட்டினத்தில் கோதாவரி கரையில் அமைக்கப்பட்டுள்ள மகா புண்ணிய சேத்திரம் கோவில் மண் அரிப்பின் காரணமாக சரிந்து ஆற்றுக்குள் விழுந்தது.

அது சமயம் பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments