திண்டுக்கல்லில் சாலையோரம் வீசப்பட்ட ஆதார் அட்டைகள், பான் அட்டைகள், தபால்கள்..!

0 2853
திண்டுக்கல்லில் சாலையோரம் வீசப்பட்ட ஆதார் அட்டைகள், பான் அட்டைகள், தபால்கள்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செண்பகனூர் அருகே சாலையோர ஓடையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள், பான் அட்டைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தபால்களை போலீசார் சேகரித்து அஞ்சல்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

இந்த தபால்கள் அனைத்தும் 3 மாதத்திற்கு முன்பு அனுப்பப்பட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தபால்களை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் சாலையின் ஓரத்தில் வீசப்பட்டதால், அதுகுறித்த விவரங்கள் தெரியாமல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதில், சம்பந்தப்பட்ட அஞ்சலக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments