மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு : உடற்கல்வி ஆசிரியர் கைது..!
கோவையில் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் பிரபாகரன் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி 200க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Comments