இலங்கையில் அவசரநிலை ஆகஸ்ட்-14 வரை நீட்டிப்பு

0 2511

இலங்கையில் அமலில் உள்ள அவசரநிலை பிரகடனம் வரும் ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்-கும் பதவி விலக கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுச் சொத்துகள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு இலங்கையில் மீண்டும் அவசர நிலையை ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூலை 19ந்தேதி அறிவித்தார்.

அதன் பின் நடந்து முடிந்த தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அமலில் உள்ள அவசரநிலை சட்டம் நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments