நள்ளிரவில் கனரா வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி.. அலாரம் ஒலித்ததும் தப்பியோடிய கொள்ளையர்கள்.!

0 18453

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, நள்ளிரவில் கனரா வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்று, எச்சரிக்கை அலாரம் ஒலித்ததும் தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கச்சிராயன்பட்டி கிராமத்தில் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள இந்த வங்கியில் ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர். 

நள்ளிரவில் வங்கிக்கு வந்த கொள்ளையர்கள், முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அச்சமயம் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையடிப்பதைக் கைவிட்டு கொள்ளையர்கள் தப்பிய நிலையில், வங்கியில் இருந்த பணம், நகைகள் தப்பியது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments