தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 4,500 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்!

0 2065

போதை மாத்திரைகள் தயாரிப்பதற்காக, தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி கடற்கரையில் திடீர் சோதனை மேற்கொண்ட போலீசார் அங்கு பதிவு எண் இல்லாத படகை ஆய்வு செய்த போது, சுமார் 439 அட்டைகளில் 4,500 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.

மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது என்பதுடன் மாத்திரைகளை வாங்கியதற்கான ரசீதும் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments