குடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது!

0 2512

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற  காங்கிரஸ் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை இன்று இரண்டாவது முறையாக விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் பேரணி செல்ல முயன்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து குடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்ததால் ராகுல்காந்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments