கோவில் விழாவில் முதல் மரியாதை கொடுப்பது குறித்து தகராறு.. கம்புகளை கொண்டு தாக்கிக்கொண்ட இரு பிரிவினர்!

0 6507

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோவில் விழாவில் முதல் மரியாதை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கம்புகளை கொண்டு இரு பிரிவினர் தாக்கி கொண்டனர்.

வாலாந்தூர் பகுதியில் உள்ள கோவிலில் குடமுழுக்கு விழாவை தொடர்ந்து, 48-வது நாள் பூஜை நடைபெற்றது.

இதில் ஒரு பிரிவினருக்கு முதல் மரியாதை கொடுக்கப்பட வேண்டியதாக கூறப்படும் நிலையில், மற்றொரு பிரிவினர் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்ததால் அவர்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்ததால் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments