குஜராத்தில் விஷசாராயம் அருந்தியவர்களில் 24 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

0 2156

குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் போடாட் மாவட்டத்தில் விஷசாராயம் அருந்தியவர்களில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரோஜிட் கிராமத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்திய 50க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி சரிந்த நிலையில், அகமதாபாத் மற்றும் போடாட் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments