பட்டா மாறுதலுக்கு ரூ.20,000 லஞ்சம்.. ரசாயனம் தடவிய நோட்டை பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்ட கிராம நிர்வாக அலுவலர்..!

0 3960
பட்டா மாறுதலுக்கு ரூ.20,000 லஞ்சம்.. ரசாயனம் தடவிய நோட்டை பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்ட கிராம நிர்வாக அலுவலர்..!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பட்டா மாறுதலுக்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

உத்தண்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் பட்டா மாறுதலுக்காக கிராம நிர்வாக அலுவலரான ரமேஷ் என்பவரை அணுகியதாகவும், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ராஜேஷ் தகவல் தெரிவித்த நிலையில், அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பிய போலீசார், அதனை கிராம நிர்வாக அலுவலர் லஞ்சமாக பெறும் போது சுற்றி வளைத்து கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments