ரூ.59 லட்சம் மதிப்புள்ள துணிகளுக்கு பணம் தராமல் அலைக்கழிப்பு.. திருப்பூர் தொழிலதிபரை கடத்திய வடமாநிலத்தவர்கள்..!
திருப்பூரை சேர்ந்த ஜவுளிக்கடை தொழிலதிபரை கடத்திய வழக்கில் வடமாநில இளைஞர்கள் 4பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓமலூர் பேரூராட்சியில் உள்ள தனியார் விடுதியில் தொழிலதிபர் மற்றும் 4 வட மாநில இளைஞர்கள் தங்கியிருந்தனர்.
அப்போது விடுதி மேலாளரிடம் தன்னை வட மாநிலத்தவர்கள் கடத்திச் செல்வதாக தொழிலதிபர் கூறியுள்ளார். தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் விரைந்து சென்று வடமாநிலத்தவர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது திருப்பூரில் ஜவுளி கடை வைத்திருக்கும் தொழிலதிபர் சரவணன் என்பவர் தங்களிடம் 59லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகளை வாங்கியதாகவும்,அதற்கு உரிய பணம் தராமல் ஏமாற்றி வந்ததால் கடத்திச் செல்வதாகவும் தெரிவித்தனர்.
Comments