இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து திருடிச்சென்ற பொருட்களை விற்க முயன்ற 3 நபர்கள் கைது..!
இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து திருடிச்செல்லப்பட்ட 40 பொன்முலாம் பூசப்பட்ட பித்தளைப்பிடிகளை விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியபோது, மக்களுடன் உள்ளே நுழைந்த அந்த நபர்கள் சுவற்றில் திரைசீலைகளை தொங்க விடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த 40 பித்தளைப்பிடிகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. இவற்றை அவர்கள் விற்க முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Comments