மும்பையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த 7 பேர் கொண்ட கும்பல் கைது

0 2193

மும்பையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 25 ஐபோன்கள் உட்பட 78 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மன்குர்டில் ஒரு நபரின் செல்போன் திருடப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார், திருடப்பட்ட செல்போனை வாங்கும் ஒரு நபரை பிடித்தனர். அவன் கொடுத்த தகவலின் படி, இதில் தொடர்புடைய 6 பேரைக் கைது செய்தனர்.

திருடிய செல்போன்களை முகவர்கள் மூலம் உத்தரபிரதேசம், கொல்கத்தா நேபாளம் ஆகிய இடங்களில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments