லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் புகுந்த காட்டுப்பன்றி.. தோஷம் எனக் கூறி சுவாமி தரிசனம் தற்காலிகமாக நிறுத்தம்.!

0 4084

தெலுங்கானா மாநிலம் யாதகிரிகுட்டா மலை மீது உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் காட்டுப்பன்றி உயிரிழப்பால் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இங்குள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நேற்று மதியம் காட்டுப்பன்றி ஒன்று புகுந்து வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு சென்றது.

இதனை அறிந்த அங்கிருந்தவர்கள் அதனை விரட்ட முயன்ற போது வழிதடுமாறி மலைமீது இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது. சாஸ்திர ரீதியாக சுத்தம் செய்யும் நடவடிக்கைக்குப் பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments