கேரளாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி மாணவி தாய் கண்முன்னே ரயில் மோதி பலி..!

0 10476
கேரளாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி மாணவி தாய் கண்முன்னே ரயில் மோதி பலி..!

கேரளாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி மாணவி, தாய் கண் முன்னே ரயில் மோதி உயிரிழந்தார்.

கண்ணூரைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி வீட்டுக்கு அருகில் இருக்கும் ரயில் தண்டவாளத்தை கடந்து பேருந்தில் ஏறி பள்ளிக்கு செல்வது வழக்கம்.

காலையில் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்ட மாணவி பேருந்துக்கு தாமதமானதால், மூடியிருந்த ரயில்வே கேட்டுக்குள் நுழைந்து தண்டவாளத்தை கடக்க முயன்ற நிலையில், அவ்வழியாக அதிவேகமாக வந்த ரயில் மோதி மாணவி தூக்கி வீசப்பட்டார்.

பேருந்து ஏற்றி விடுவதற்காக உடன் சென்ற தாயாரின் கண் முன்பே மாணவி உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments