மாஜிஸ்திரேட் முன் அளித்த வாக்குமூலத்தை வைத்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

0 4317
மாஜிஸ்திரேட் முன் அளித்த வாக்குமூலத்தை வைத்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

சாட்சியங்கள் மாஜிஸ்திரேட் முன்பு அளித்த வாக்குமூலங்களை மட்டுமே முக்கிய ஆவணமாக வைத்து விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து சிவா என்பவர் மேல்முறையீடு செய்தார். அதன் விசாரணையில், மனுதாரரின் ஒப்புதல் வாக்குமூலத்தை கவனத்தில் கொண்டே விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, பொதுவான சாட்சியங்கள் மூலம் குற்றத்தை நிரூபிக்க போலீசார் முயற்சிக்கவில்லை எனக் கூறி ஆயுள் தண்டனையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments