கொள்ளையடித்துச் செல்வதற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெட்கமாக இல்லையா? - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

0 2483
கொள்ளையடித்துச் செல்வதற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெட்கமாக இல்லையா?

அதிமுக தலைமையகத்தின் கதவை உடைத்து உள்ளே செல்லவும், அங்கிருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் செல்லவும் பன்னீர்செல்வத்துக்கு வெட்கமாக இல்லையா? என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வினவியுள்ளார்.

அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வமும் அவர் ஆதரவாளர்களும் கதவை உடைத்து உள்ளே புகுந்து ஆவணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகச் சென்னை இராயப்பேட்டைக் காவல்நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார் அளித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்னீர்செல்வம் வந்த வாகனத்திலேயே பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments