ஆகஸ்ட் 13,14,15 தேதிகளில் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்- முதலமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள்

0 2081

நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மக்கள் தங்களின் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென முதலமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மத்திய அரசு அழைப்பு விடுத்தற்கு ஏற்ப அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார். இதற்கான விளம்பர போஸ்டர் மற்றும் துண்டு பிரசுரங்களை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் வெளியிட சபாநாயகர் செல்வம் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments