தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.!

0 1584

மதுரை அவனியாபுரத்தில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான நிறுவனங்களான ஜெயபாரத், கிளாட்வே கிரீன் சிட்டி, அன்னை பாரத் சிட்டி, உள்ளிட்ட நிறுவனங்களின் வீடுகள், அலுவலகங்களில் 3-வது நாளாக சோதனை தொடர்கிறது.

முதல் இரு நாட்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், தங்கம், பணம் உள்ளிட்டவற்றை முறைப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments