ஹெனான் மாகாணத்தில் வங்கிக்கணக்குகள் முடக்கம்.. வங்கிகளை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம்!

0 1517

சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள 4 சிறிய கிராமப்புற வங்கிகளில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் வங்கிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வங்கிகளைப் பாதுகாக்க பீரங்கிகளுடன் ராணுவம் நிறுத்தப்ப்டடுள்ளது. மீண்டும் தியானமென் சதுக்கப் படுகொலைகளை நினைவுபடுத்தும் அச்சமூட்டும் காட்சி போல இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

1989 ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது சீனா ராணுவ அடக்குமுறையை ஏவியது. அதில் 241 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கில் காயம் அடைந்தனர். அது போல மீண்டும் ஒரு காட்சி..எங்கும் ராணுவம் எல்லா வங்கிகள் முன்பும் பீரங்கிகள். மக்கள் தங்கள் முடக்கப்பட்ட வங்கிக்கணக்குகளை விடுவிக்கும் படி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments