திருமண கோஷ்டி சென்ற படகு நதியில் கவிழ்ந்து கோர விபத்து.!

0 2343

பாகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்டோர் சென்ற படகு நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 50 பேர் வரை உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு 2 படகுகளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அதிக பாரம் தாங்காமல் சிந்து நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து விரைந்த போலீசார், மீட்புக் குழுவினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்த நிலையில், 48 மணி நேரம் ஆகியும் மற்றவர்களை கண்டுபிடிக்க இயலாததால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments