நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைந்ததால் பயணிகளுக்கு மூச்சுத் திணறல்.!

0 2756

துபாயில் இருந்து கொச்சி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைந்ததால் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

நடுவானில் போயிங் 787 விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைவதாக கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அளித்துள்ளார். பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து ஆக்சிஜன் மாஸ்க் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமான ஊழியர்கள் உள்பட 258 பேர் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 2 மூத்த அதிகாரிகள் குழுவை விமான போக்குவரத்து இயக்குநரகம் நியமித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments