அமெரிக்காவின் புறநகரில் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக போலியோ வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு!

0 1418

அமெரிக்காவின் நியூ யார்க் புறநகரில் 30 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக போலியோ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நியூ யார்க் புறநகர் ராக்லேண்ட் மாவட்டத்தில் இளைஞருக்கு போலியோ உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

போலியோ பாதிக்கப்பட்டவர் வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments