பேருந்து ஓட்டுனரின் இருக்கை அருகில் உள்ள கதவில் அமர்ந்து ஆபத்தான நிலையில் பயணிக்கும் பெண் பயணி.!

0 37431

கோவையில் தனியார் பேருந்து ஓட்டுனரின் இருக்கை அருகில் உள்ள கதவில் அமர்ந்து ஆபத்தான நிலையில் பயணிக்கும் பெண் பயணி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காந்திபுரம்- ஆனைகட்டிக்கு செல்லும் தனியார் பேருந்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  ஆனைகட்டிக்கு செல்லும் வழி மலைப்பாதை என்பதால் பல்வேறு வளைவுகள் இருக்கின்ற சூழலில் இது போன்று பயணிப்பது மிகவும் ஆபத்தானது என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

எனவே அப்பகுதிக்கு கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments