கரூரில் வாரிசு சான்றிதழ் தர லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது.!

0 24390

கரூர் அரவக்குறிச்சியில் வாரிசு சான்றிதழ் தர லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது செய்யப்பட்டார். சின்னதாராபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தந்தை இறந்த நிலையில் வாரிசு சான்றிதழ் கேட்டு அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பத்திருந்தார்.

சான்றிதழ் தர தாசில்தார் ராஜசேகரன், பழனிச்சாமியிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், அது குறித்து அவர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அதிகாரிகளின் திட்டப்படி நேற்றிரவு ராஜசேகரன் பழனிசாமியிடம் பணம் வாங்கிய போது ராஜசேகரன் கையும் களவுமாக பிடிபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments