உலகளவில் 70 நாடுகளில் 14,000 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு.!
உலகளவில் குரங்கு அம்மை பரவல் கண்டறியப்படும் நிலையில், அது தொடர்பாக முக்கிய முடிவெடுக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு கூட்டம் இன்றும் நடைபெற உள்ளது.
கடந்த மே மாதம் முதல் தற்போது வரை சுமார் 70 நாடுகளில் 14 ஆயிரம் பேருக்கு அந்நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், நோய்ப்பாதிப்பு அதிகரிக்கும் சூழலில் மீண்டும் கூட்டம் நடைபெற உள்ளது.
நோய்ப்பரவல் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்யும் குழுவினர், அதனை கட்டுப்படுத்துவது குறித்த அறிவுறுத்தல்களை பரிந்துரைப்பார்கள் என கூறப்படுகிறது.
Comments