கடன் பிரச்சனை காரணமாக தந்தை, மகள் விஷம் குடித்து தற்கொலை

0 2202

கரூரில் கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டனர். 

ஆசிரியராக பணிபுரியும் முகமது பரீத் கரூர் அமராவதி நகரில் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்டை அரசு வங்கியிலும், கூட்டுறவு வங்கியிலும் கடன் வாங்கி கட்டியதாகவும், கடனை திருப்பி செலுத்துவதில் பிரச்சனை நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் முகமது பரீத், அவரது மனைவி மற்றும்  மகள் மூவரும் சல்பர் மாத்திரையை கரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

முகமது பரீத் மற்றும் அவரது 16 வயது மகள் ஜூகுனாச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். முகமது பரீத்தின் மனைவி நஸ்ரின் பானுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments