பாடகர் சித்து மூசேவலா கொலையில் தொடர்புடைய 2 குற்றவாளிகள் சுட்டுக்கொலை

0 849

பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில், 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், பாடகர் சித்து மூசேவலா கொலை சம்பவத்தில் தொடர்புடைய இரு கொலையாளிகள், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சீச்சா பக்னா பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் கொலையாளிகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது இரு பிரிவினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 3 காவலர்கள் மற்றும் செய்தியாளர் ஒருவர் காயமடைந்த நிலையில், கொலையாளிகள் இருவரும் போலீசாரின் பதில் தாக்குதலில் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments