நல்லெண்ணெய் ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து -குடம், வாளியில் எடுத்துச்சென்ற மக்கள்

0 1672

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் நல்லெண்ணெய் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்ததையடுத்து அப்பகுதி மக்கள் வாளி, குடம் போன்றவற்றில் நல்லெண்ணெய்யை எடுத்துச் சென்றனர்.

18 ஆயிரம் லிட்டர் நல்லெண்ணெய்யை ஏற்றிச் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி தலைகீழாக கவிழ்ந்தது. இதனையடுத்து டேங்கர் லாரியில் இருந்த நல்லண்ணெய் முழுவதும் கீழே கொட்டி அங்கு இருந்த சிறிய குட்டையில் தேங்கியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் குட்டையில் தேங்கி இருந்த நல்லெண்ணெய்யை குடம், வாளி போன்றவற்றில் எடுத்துச்சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments