டெல்லியில் உள்ள 3 அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து

0 1000
டெல்லியில் உள்ள 3 அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து

டெல்லியில் நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள 3 அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்ட 12 பேரை மீட்புக்குழுவினர் மீட்ட நிலையில், ஒரு சிலருக்கு மட்டும் தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் முதல் தளத்தில் பற்றிய தீ மளமளவென கட்டிடம் முழுவதற்கும் பரவிய நிலையில் அப்பகுதியில் கரும்புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments