சொத்தை கேட்டு கொடுமை செய்த கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி

0 2707
சொத்தை கேட்டு கொடுமை செய்த கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி

சென்னை ராயபுரத்தில், சொத்தை கேட்டு கொடுமை செய்த கணவரை, மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

சாலையோரத்தில் துணி வியாபரம் செய்து வந்த சரவணன் என்பவர், மனைவி முத்துலட்சுமி பெயரில் தஞ்சாவூரில் உள்ள சொத்தை தன் பெயருக்கு எழுதி கொடுக்கும் படி குடி போதையில் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த முத்துலட்சுமி பனியனால் கழுத்தை நெரித்து சரவணனை கொலை செய்துவிட்டு அவர் இயற்கையாக இறந்து விட்டதாக நாடகமாடியுள்ளார். சரவணன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது தம்பி போலீசாரிடம் கூறியுள்ளார். முத்துலட்சுமியிடம் போலீசார் விசாரித்த போது கழுத்தை நெரித்து கணவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments