7 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு ; டியூஷன் வாத்தியாருக்கும் அவருக்கு உடந்தையாக இருந்த இளம்பெண்ணுக்கும் ஆயுள் தண்டனை

0 3506
7 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு

சென்னையில் 7 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், டியூஷன் வாத்தியாருக்கும் அவருக்கு உடந்தையாக இருந்த இளம்பெண்ணுக்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு டியூஷன் வாத்தியாரும், அந்த இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments