சிவாஜியின் உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறு - நடிகர்கள் ராம்குமார், பிரபு தரப்பு வாதம்

0 4435
சிவாஜியின் உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறு - நடிகர்கள் ராம்குமார், பிரபு தரப்பு வாதம்

நடிகர் சிவாஜி கணேசனின் உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது என பாகப்பிரிவினை கோரிய வழக்கில் நடிகர்கள் ராம்குமார், பிரபு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜியின் மரணத்துக்குப் பின், அவரது 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை என மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணையில், சொத்துக்கள் பிரிப்பதில் ராம்குமார், பிரபு நேர்மையாக செயல்படவில்லை என்பதால் நீதிமன்றத்தை நாடியதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

இயக்குனர் குழு ஒப்புதலின்றி சாந்தி திரையரங்கு பங்குகள் விற்கப்பட்டதாகவும் சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் வாதிடப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments